யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்தல் – 04 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்திற்கு பஸ்வண்டியில் கஞ்சாவை கடத்தி வந்து அதனை சந்திவெளிப் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த யாழ் பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பற்றை காட்டுப்பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிடட்டனர் இதன் போது கேரள கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பளை இத்தாவில் பகுதியைச்சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் எனவும் இதில் ஒருவர் மட்டு கல்குடா பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ளதாகவும் இவர் கஞ்சாவை மட்டக்களப்பிற்கு கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக அங்கிருந்து கஞ்சா வியாபாரிகளை பஸ்வண்டியில் இருவர் கஞ்சாவை கடத்தி வந்துள்ளதாகவும் இருவர் மோட்டர்சைக்கிளில் பிரயாணித்து சந்திவெளியை வந்தடைந்துள்ளனர்.
இதன் பின்னர் குறித்த பகுதியில் வைத்து கஞ்சாவை பொதி செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்டவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *