றம்புக்கணை சம்பவத்தில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது, சாதாரண மனிதர்கள் துப்பாக்கி ஏந்தியிருப்பதைக் காணவில்லை. ஒன்றிரண்டு பேர் கற்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படியானால், பொலிஸார் அதை அடக்குவதற்கு அதே வகையான சமமான பலத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
பெரும் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படலாம். கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மக்களைக் கலைப்பதற்காகவே, மக்களைக் கொல்வதற்காக அல்ல.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.