“ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம்.” – பொலிஸ் மா அதிபர் உறுதி !

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸ்மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்  தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

எதிர்காலத்தில் ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் என பொலிஸார் உறுதியளித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொலிஸ்மா அதிபர் நேற்றையதினம் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற அனைத்து தகவல்களையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் கையளித்துள்ளதாக ஆணையாளர் நாயகம் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *