11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு !

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனவே, வழக்கை வேறு திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாற அரச தரப்பு சட்டத்தரணி கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது, குற்றவியல் சட்டத்தின் கீழ் 667 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *