சுவசரிய நோயாளர் காவு வண்டிச் சேவை நிலையற்றதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிதிப்பற்றாக்குறையால் அம்புலன்ஸ் சேவை எந்த நேரத்திலும் மூடப்படும் என்று அவர் கூறினார். இந்தச் சேவையானது நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை வைத்தியசாலையில் சேர்ப்பதாகவும், இதனை சமூக பாதுகாப்பு நடவடிக்கையாகப் பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனவே இதனைத் தொடர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு நிதியமைச்சரை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.