ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு அருகில் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தற்போது இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்ட இடத்திற்கு கலகத் தடுப்புப் பொலிஸார் வரவழைக்கப்பட்டதனை தொடர்ந்து ஓரளவு எதிர்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இதேவேளை போராட்டக்காரர்களை சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். இதே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் அப்பகுதியில் போராட்டம் ஒன்று அவருடைய ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *