ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற  தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை – சுமந்திரன்

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற  தெரிவில் சட்டபூர்வமான அங்கீகாரம் இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளமை குறித்து த இந்து நாளிதழுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி முற்றாக சட்டபூர்வமான தன்மையை இழந்துவிட்டார். மக்கள் அவர் வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானப் பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றம் விரைவில் முடிவை காண்பிக்கும், ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற தெரிவில் சட்டபூர்வமான அங்கிகாரம் இல்லை. அவர் தனது தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *