“வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியவர்களில் பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல.”- மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க செயலி மூலம் எரிபொருள் சேகரிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் (27) மாத்திரம் பல தடவைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்த 1200 இற்கும் அதிகமானவர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்தபோதும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. எனினும், மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்கள் சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் கேட்டுக்கொண்ட அமைச்சர், நாட்டில் இருக்கும் எரிபொருளை முகாமைத்துவம் செய்து பொது மக்களுக்கு அதனை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எரிபொருளுக்காக செலுத்த வேண்டிய கொடுப்பனவு தொடர்பிலும் மதிப்பீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான மசகு எண்ணெய்யுடான கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.

இதன்மூலம் மூலம் ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் சுத்திகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதியும் டீசலை ஏற்றிய மற்றுமோரு கப்பல் இலங்கை வரவுள்ளது. அடுத்த மாதம் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் இரண்டு எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானங்களுக்கு தேவையான எரிபொருளை முகாமைத்துவம் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

சில ஊடகங்கள் பொது மக்களை தவறான வழியல் இட்டுச் செல்லும் வகையில் எரிபொருள் தொடர்பான தகவல்களை வெளியிடுகின்றமை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்காலத்தில் தொடர்ச்சியாக மின்விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நீர்மின் உற்பத்தியினை முகாமைத்துவம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சாரப் பட்டியல் செலுத்துவதில் சமயத் தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. எனினும், குறித்த சமய தலங்களிலும் மின்சார்ததை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியமாகும். வீடுகள், மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும்; மின்சாரத்தை விரயம் செய்ய வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டார்.

இதேவேளை மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *