கெசினோ ராஜா எமக்கு வேண்டாம் – தம்மிக பெரெராவின் வீட்டின் முன்பும் போராட்டம் !

தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தம்மிக்க பெரேராவினால் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து, தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே தம்மிகபெரேராவுக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. “தம்மிக்க பெரேராவின்” வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
“கெசினோ ராஜா எமக்கு வேண்டாம்
“தம்மிக்க வரி ஏய்ப்பு செய்தவர்,
“தம்மிக்க எமக்கு வேண்டாம்”,
கோட்டா பெயில் போன்ற பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *