இலங்கையின் இறையாண்மையுடைய சர்வதேச பிணையங்களை கொள்வனவு செய்த அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி (Hamilton Reserve Bank) தமது முதலீட்டை வட்டியுடன் முழுமையாக செலுத்துமாறு கோரி இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜூலை 25 ஆம் திகதியுடன் குறித்த பிணையங்களுக்கான பத்திரம் காலாவதியாகிறது. அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி 250 மில்லியன் டொலரை 5.8 வீத வட்டியில் முதலீடு செய்துள்ளது. இதன் பிரகாரம், இலங்கை குறித்த வங்கிக்கு 257.5 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.