அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான பெற்றோல் நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள விடுத்துள்ள அவர் நாட்டில் டொலர் கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நேரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள டொலர்கள் அல்லது பிற வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொணர இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.