சிறுபோக அறுவடைக்கான எரிபொருளை வழங்குங்கள் – விவசாய அமைச்சு கோரிக்கை !

சிறுபோக அறுவடை மற்றும் யூரியா உரத்தை விநியோகிக்க போக்குவரத்துக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 20,275,000 லீற்றர் டீசல், சிறுபோக அறுவடை மற்றும் உர போக்குவரத்துக்கு தேவைப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் சுமார் 4,77,000 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அறுவடை இம்மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

மேலும், இந்திய அரசினால் வழங்கப்படும் 65,000 மெற்றிக் தொன் யூரியா 2000 பாரவூர்திகள் மூலம் 566 கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்செய்கை தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *