குவைத்தில் காலமான கனகநாயகத்தின் உறவினர்களை தொடர்புகொள்ள கோரிக்கை

வெளி விவகார அமைச்சு அறிவிப்பு குவைத்தில் காலமான இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவரின் உறவினர்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவர் குவைத் நகரில் இறந்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இவரின் கடவுச்சீட்டு இலக்கம் M 123850 (NEW) ICM 035568ஆகும்.

இறந்தவரின் வாரிசுகளைப் பற்றியோ அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களைக் கொடுக்க முடிந்தவர்களோ இல. 14 சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் “கொன்சுலர்’ பிரிவுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தொலைபேசி இலக்கம் 0112437635, தொலைநகல் 0112473899.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *