நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கும் போராட்டக்காரர்கள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்படும் தடை !

நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த இராணுவத்தினருடன்கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் நாடாளுமன்றத்தின் கடைசி வீதித்தடை ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க ராணுவத்தினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *