சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு !

தமிழகத்தின் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்து நாடு திரும்பியது பாகிஸ்தான் அணி

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்றது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிலும் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *