தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை – ஜெனீவா கூட்டத்தொடரை மையப்படுத்தி நகரும் ரணில் அரசு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். அதற்கமைய முதல் கட்டமாக குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன் பின் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க அதிபர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

………………..

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணில் தலைமையிலான அரசு தமிழர்களை ஆதரித்து நடத்துவது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசியல்கைதிகளின் விடுதலை என்ற நாடகத்தை நடாத்துவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது புதுமையான விடயமும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடங்கும் போது தமிழர்கள் தொடர்பில் தளர்வாக நடந்துகொள்வது போல ஒரு விம்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்தும். மேலும் இதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாக நம்பப்படும். ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைய அரசாங்கம் தனது இனவாத முகமூடியை மீண்டும் அணிந்து கொள்ளும். இது தான் நடந்த ஒரு தசாப்த காலமான இலங்கையின் நடைமுறை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *