கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனச்சாட்சி இருந்தால் சலுகைகளை பெறமாட்டார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிய நிலையில் சிறப்புரிமை பெற்று வாழ்வது தார்மீக ரீதியாக சரியானதா என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சரியான முறையில் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறாமல் ஓடிவிட்டார்.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *