ஒரு தலைவராக ஒரு வீரர் கொடுக்கக்கூடிய சிறந்த விடயம் தன்னம்பிக்கைதான் என இலங்கையின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தலைவராக வீரர்களுக்கு என்னால் வழங்கக்கூடியது தன்னம்பிக்கை. எனது திறமைக்கு ஏற்ப வீரர்களுக்கு அதனை வழங்குவேன் என நினைக்கிறேன். வீரர்கள் தவறிழைத்ததற்காக நான் ஒருபோதும் வருத்தமடைய மாட்டேன். உணர்ச்சிகள் கிரிக்கெட்டில் முக்கியமானவை. அந்த உணர்வுகளை சரியாக நிர்வகித்தால் அணியை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
இளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும் நம்பிக்கை முக்கியமானதாகும். அணியின் சிரேஷ்ட வீரர்கள் புதிய வீரர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை இந்த போட்டியில் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.