TMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சபையாக மாற்றம்

slfp-tmvp.jpgTMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று (மார். 18) முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ். பாக்கியராசா, உப தவிசாளருடன் மேலும் மூன்று ரி. எம். வி. பி. உறுப் பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்களில் 6 பேர் ரி. எம். வி. பி. கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக் கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே, ஓட்டமாவடி பிரதேச சபை இக்கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *