சட்டத்தை மீறி தொல்லியல் திணைக்களத்துக்கு 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் !

2018-2019 ஆண்டுகளில் மத்திய கலாசார நிதியம் சட்டத்தை மீறி 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொல்லியல் திணைக்களத்துக்கு பணியமர்த்தியுள்ளது என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.

இவர்களின் சம்பளத்துக்காக 106 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவ்வலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்றின் சார்பில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததன் அடிப்படையில் இந்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *