யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட 23 வயதான பெண் கைது !

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் குழுவினர் குறித்த பெண்ணை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 200 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட போதை பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிசாரிடம் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *