டயானா கமகே போன்ற வெளிநாட்டவர் நாடாளுமன்றத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது – உதய கம்மன்பில

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் வெளிநாட்டவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பதைவிட வெளிநாட்டவர் நாடாளுமன்றத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டு டொலரை இலங்கைக்கு கொண்டு வர கஞ்சா செடி வளர்ப்பு , களியாட்ட விடுதிகளின் அதிகரிப்பு போன்ற பல விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *