ஓமான் மனித கடத்தல் விவகாரம் – ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இலங்கை புலனாய்வுத்துறை !

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் வசிக்கும் 77 பேரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் செயலாளர் இ.குஷான், ஓமானில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் 2022 டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் மார்ச் மாதம் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை கைவிடப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *