வரவு -செலவு திட்ட 3ம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் – வாக்களிக்காத தமிழ்தேசிய கூட்டமைப்பினர் !

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 3ஆம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்களிக்கவில்லை.

மேலும் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமவிங்கவினால் கடந்த மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. அத்துடன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போதும் வாக்களிக்காத கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு தருவதாக கூறியதால் கூட்டமைப்பினர் எதிராக வாக்களிக்காது நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்ததாக அறிவிறித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *