சமகால இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் ஒன்றாக பாடசாலை மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகளவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிடிபன வடக்கு ஸ்ரீ உத்தரராம விஹாரஸ்த உத்தரதம்ம தர்ம வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச அல்லது அதிநவீன சக்திகளால் தேசத்தை அழிக்கும் நோக்கில் சிறுமிகளுக்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் இலவசமாக வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்தின் பின்னர் எமது நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நெருக்கடிகளை சமாளிக்க பொருளாதார தீர்வொன்று இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பொருளாதார மீட்சி மற்றும் போதைப்பொருள் பாவனையிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுதல் என்பன இன்று இலங்கை எதிர்கொள்ளும் இரண்டு முக்கியமான சவால்களாக மாறியுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். Tags: அமைச்சர் பந்துல குணவர்தனஇலங்கை போதைப்பொருள் பாவனை Show More Previous Post உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகள் மனுத்தாக்கல்! Next Post பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் நடத்திய பல்கலைகழக மாணவர்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு !