கிளிநொச்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் – குவிக்கப்பட்ட பொலிஸார் !

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடைந்தது.

வடமாகாண ஆளுநரின் செயலாளரை சந்தித்த போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினர். ஆளுநர் இல்லாத நிலையில் இரண்டு வாரங்களுக்குள் இதற்கான பதிலை தருவதாக ஆளுநரின் செயலர் தமக்கு வாக்குறுதியளித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் இடம்பெற்றவேளை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஆளுநர் செயலக நுழைவாயில் வழிமறிக்கபட்டு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *