நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்ய நடவடிக்கை..?

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையை இலங்கை மருத்துவ சபை நிராகரித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவ சபைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சட்டத்திற்கு அமைவாக இலங்கை மருத்துவ சபை உரிய நடைமுறைகளை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் கடமையை சரிவ செய்யவில்லை என்பதனை உணர்ந்தால், வைத்தியர்களின் ஒழுக்கத்தை கையாள்வதற்காக வெளியிடப்பட்ட 1990 ஆம் ஆண்டு 757/7 அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றுமாறும் இலங்கை மருத்துவ சபை சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *