புலிகள் எந்தவொரு பிரிவினரையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என பிரித்தானியாவின் சர்வகட்சி பாராளுமன்றக்குழுத் தலைவர் நெசபி பிரபு தெரிவித்துள்ளார்.
நெசபி பிரபு அவர்கள் இலங்கையின் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது 10 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 பாதை திறக்கப்பட்டுள்ளது. புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை பலவந்தமாக தடுத்து அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு சுமார் 2,50,000 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ஐ.நா. கணக்கிட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் பேர்வரையிலேயே அப்பிரதேசங்களில் இருப்பதாக வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர்வரை புலிகளது கட்டுப்பாடுகளையும் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது வெளியேறியுள்ளனர்.
இந்த மக்களை விடுவிக்குமாறு ஐ.நா. சபை இணைத்தலைமை நாடுகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்றன விடுத்துவரும் தொடர்ச்சியான வேண்டுகோள்களை எல்லாம் புலிகள் புறக்கணித்தே வந்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது புலிகள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சனநாயக வழிமுறைக்கு திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனினும் இந்தியத் தலைவர் ராஜீவ் காந்தி உட்பட பல கொலைகளுக்குக் காரணமான புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்ந்தும் தமது மூடக் கொள்கையிலேயே இருந்து வந்தார்.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாட்டை தனக்குக்கீழ் வைத்திருந்த கருணா அம்மான் அவ்வமைப்பிலிருந்து வெளியேறினார். ஈழம் என்பது சாத்தியப்படாததொன்று என்பதை அறிந்த கருணா தனது போராளிகள் சகிதம் அரசாங்கத்தரப்பிற்கு மாறினார். அத்தோடு புலிகளது நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.
புலிகள் சரணடைய வேண்டும் அல்லது அழித்தொழிக்கப்பட வேண்டும். புலிகள் ஒருபோதும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த வில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே அங்கு உண்மையான சமாதானம் ஏற்படும் என்பதோடு அப்பிரதேசம் சர்வதேச சமூகத்தின் உதவிகளோடு மீளக்கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
இந்தியாவின் தேசத்தந்தை யாரென ஆசிரியர் ஒருவர் மாணவரைக் கேட்டார். அதற்கு மாணவன் ராஜீவ்காந்தி என்று பதிலளிக்க, திகைத்தப் போன ஆசிரியர் மாணவரைப் பார்த்து நீ சொல்வது பாதி தான் சரி என்றாராம். அது போலவே நெசபி பிரபுவின் அறிக்கையும் இருக்கின்றது.
malan
NICE GUYS FINISH LAST
aandy
kandi is not only one leader to India. RAJIVE also