சினிமா பாணியில் கம்பளையில் ATM இயந்திரம் திருட்டு !

கம்பளையில் தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை திருடிய சந்தேகநபர்கள் பயணித்த வேனின் சாரதியை வேனில் கட்டிவைத்து விட்டு சென்ற நிலையில் பேராதனை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (24) இரவு 12.40 மணியளவில் முகமூடி அணிந்த 4 பேர் வேனில் வந்து பாதுகாப்பு அதிகாரியை கட்டிப்போட்டு ATM இயந்திரத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

சம்பந்தப்பட்ட ATM இயந்திரத்தில் இருந்த தொகை இதுவரை வெளியிடப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *