சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி – தடுக்க உடனடி நடவடிக்கை!

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று (31) நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளால் அரசாங்கம் பாரியளவு வரி வருமானத்தை இழக்கும் எனத் தெரிவித்தார்.

சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தொலைபேசிகளின் IMEI எண்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட தொலைபேசிகள் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கையொன்றை வழங்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *