இலங்கையில் ஒரு பல்கலைகழக மாணவனுக்காக அரசாங்கம் 32 இலட்சம் ரூபா செலவழிக்கிறது !

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம்  ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என   உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது ஒரு சமூக உடன்பாடு எனவும், ஒப்பந்தத்தை மீறும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உறுதிமொழியை  மீறும் மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி ரத்து செய்யப்படும்.

மேலும், பல்கலைக்கழகத்தில் சேரும் ஒரு மாணவனுக்காக  ஆண்டுக்கு 8 இலட்சம் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.  அதன்படி, 4 ஆண்டுகள் படித்து விட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் மாணவர்களுக்காக  ஆண்டுகளில் 32 இலட்சம் ரூபா என்ற பெரும் தொகையை அரசு செலவிடுவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *