ஓமந்தையில் போராட்டத்துக்கு வராத மக்கள் – ஏமாற்றத்துடன் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் ஓமந்தை வைத்தியசாலையின் பின்புறமாக எரியூட்டும் நிலையமூடாக எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை கழிவுகள் ஓமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள அதற்கென அமைக்கப்பட்ட எரியூட்டும் நிலையத்தில் சுமார் 6 வருடங்களாக எரியூட்டப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் சில சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் இணைந்து குறித்த எரியூட்டல் நிலையத்தால் அருகில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் அப் பிரதேசத்தவர்களுக்கு ஆபத்து என தெரிவித்து இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு ஆதரவாக வன்னி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உட்பட சிலர் குறித்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

எனினும் கிராம மக்களின் ஓத்துழைப்பின்மையாலும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பின்மையாலும் மக்கள் வருகை தராத நிலையில் அரசியல்வாதிகள் திரும்பி  சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *