ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்!

கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பாட்டியாலா தொகுதியில் நிற்க ஏற்பாடு செய்து வருகிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *