நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது என்றும், நாடு முன்னேற வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றத்தில் ‘பொருளாதார உரையாடல்- சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்’ என்ற தலைப்பில் விசேட உரை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.