உத்தேச மாலபே தனியார் பல்கலைக்கழகம் 30 வருடங்களின் பின்னர் அரசிடம் கையளிக்கப்படும்

pr-con-02042009.jpgமால பேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்  30 வருடங்களின் பின்னர் இலங்கை உயர் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். அமைச்சினால் நியமிக்கடும் செயற்குழு அதனை  நிருவகிக்கும் என பொது நிருவாக மற்றும் உள்விவகார அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும்; உரையாற்றுகையில், மாலபேயில் அமைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம் காரணாக இலங்கையில் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று  பிழையான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இது எதுவித ஆதாரமுமற்று வெறும் யூகமாகும்.

ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் இந்த இநத தனியார்  பல்கலைக்கழகத்தில் பல்கலை அனுமதி பெறாத 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி புகட்டப்படும். இந்த பல்கலைக்கழக அனுமதியில் ஐந்த வீதம் படை வீரர்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறுவோரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுவதோடு இவர்களுக்கு இலவசமாக கல்வி போதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *