நெடுந்தீவு பகுதியில் 3 பெண்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை! அதிகாலையில் பயங்கரம்

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நெடுந்தீவு இறங்கு துறை மற்றும் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்துள்ளனர். இதன்போதே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், 1 நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை குழுவாகவோ அல்லது தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த இடத்தில் கடற்படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *