யாழ்ப்பாணத்தில் பொலிசாருக்கு கத்தியை காட்டி மிரட்டல் !

கோப்பாய் பொலிசாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.

உரும்பிராய் சந்திப் பகுதியில் நேற்று(28) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் காவல்துறையினர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டனர்.

அதன்போது பொலிசாருக்கு கிறீஸ் கத்தியைக் காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் காவல்நிலையம் கொண்டுசென்றுள்ளனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *