யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்த தனியார் காணியொன்றில் விகாரை அமைக்க பௌத்த பிக்கு ஒருவர் விண்ணப்பம்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும் அதன் எச்சங்களும் காணப்படுகின்றன.

அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

இந்நிலையில், தமிழ் பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்துக்கு அருகில் நபரொருவருக்கு சொந்தமான சுமார் 6 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் ஒரு வருடத்துக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதனையடுத்து, அந்த பிக்கு, குறித்த காணிக்குள் தான் விகாரை ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவித்தும், விகாரை அமைப்பதால் காணிக்கு அருகில் உள்ள தொல்லியல் எச்சங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா, குறித்த காணியில் விகாரை அமைக்கலாமா என அனுமதி கோரியும் தொல்லியல் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து பெற்று, விகாரை கட்டுமான பணிகளை தான் விரைந்து நிறைவேற்ற பிக்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *