நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.
இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது.
எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.