பாடசாலையின் கழிவறையில் வைத்து மாணவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – நடன ஆசிரியை மற்றும் அதிபர் கைது !

கலவான – கொடிப்பிலிகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் பதில் அதிபர் மற்றும் அதே பாடசாலையில் கடமையாற்றும் நடன ஆசிரியை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று மாலை பாடசாலையின் கழிவறையில் வைத்து இரு சிறுவர்களை கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்டுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமைய இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் அதே பாடசாலையில் 7ஆம்(12 வயது) தரத்தில் கலவிபயிலும் இரண்டு சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில், குறித்த சிறுவர்கள் பெற்றோருக்கு அறிவித்ததன் பிரகாரம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் கலவானை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பதில் அதிபரும், ஆசிரியரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *