‘பிரபாவை கைது செய்வதே இலக்கு’ – கோத்தாபய ராஜபக்ஷ

sec-def.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்வதே தற்போதைய முக்கிய விடயமாக இருக்கிறதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

படையினர் பெற்ற வெற்றி சிறப்பானதாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

புலிப் பயங்கரவாதிகளிடமிருந்த கடைசி நிலப்பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளை, தொடர்ந்தும் முன்னேறி வரும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விமானப் படையினர், மற்றும் கடற்படையினர் ஆற்றிய சேவைகளை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • மாயா
    மாயா

    நீங்களாவது தலைவரை பிடிக்கிறததாவது? கோத்தபாய கனவு காண வேண்டாம்? இந்த வெற்றி நிரந்தர வெற்றியல்ல. உங்கள் இராணுவம் எமது புதைகுழிக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. அதை மறக்க வேண்டாம் என்று கதைவிட யாரும் வர இல்லை.

    இராணுவத்தோடு மோதுறதுக்கு பதிலாக நேற்று பாரிஸ் லாச்சப்பலில் இருக்கும் “ஆசிரி” வியாபார நிலையத்தை நொருக்கி நிசான்த – சமன் – சுனில் ஆகியோரை வெட்டியுள்ளீர்கள். ஒருவர் கடுமையான நிலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

    இதைத்தான் புலிகளின் மோட்டுத் தனம் என்பது. அப்பாவிகளை தாக்குவதால் உங்கள் இலட்சியம் நிறைவேறாது. மாவிலாறுல விட்ட அதே தவறு புலம்பெயர் நாடுகளில் தொடரும் என்பதற்கு அவுஸ்ரேலியா : பாரிஸ் மோதல்கள் கட்டியம் கூறுகின்றன.

    இங்குள்ள இளைஞர்களை உசுப்பேத்திவிட்டார்கள். அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி செய்த அதே தவறை புலத்தில் புலிகள் தொடர்ந்து இருக்கின்றனர். இது சிறீலங்காவல்ல. நிச்சயம் பல இளைஞர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள்.

    இறந்த புலிகளைப் பற்றி மூச்சும் விடாத புதினம் : சங்கதி மற்றும் புலத்து புலிகள் இளையோரை தவறான வழிகளில் இட்டுச் சென்று இரையாக்கத் துடிக்கின்றனர். வன்னியின் இழப்பை இங்கும் தொடர்வதே இவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை.

    பெற்றோர்களே உங்கள் குழந்தைகளிடம் உண்மையை விளக்குங்கள்.
    இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறைகளில்தான் வாடுவர்.

    இது மிக கடினமான ஒரு காலகட்டம்.
    உணர்ச்சி மிகுதியால் எங்கு எதுவும் நடக்கலாம்.
    வன்னியை இழந்தது போல் இங்குள்ள வாழ்வையும் இழக்க வேண்டி வரும்?

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிப்பாணியை புலம்பெயர்நாடுகளிலும் நடைப்புறப்படுத்தப் புறப்பட்டால் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களுக்கும் வன்னிமக்களுடைய நிலைதான். இதை முளையிலேயே கிள்ளாவிட்டால் பேராபத்து காத்துநிற்கிறது.

    Reply
  • GNANI
    GNANI

    murugan was fooled by sivan and sacthi we been fooled by some of our media. its our kids and our childs been killed by mad ideology, anasumed decesions made by pagavan brings a war. there is no diplomatic .all the advisors were scared of mad man,they dont want to die.this guy make me angry, his picture every where.

    where will we going our lord.there any revenge by your idiotic mind.you burned evry one to die and you still hiding somewhere? please out tell us your story?

    Reply
  • மாயா
    மாயா

    ராதா படையணி தளபதி இரத்னம் மாஸ்டர் கொல்லப்பட்டுள்ளார். சுவர்ணம் ஒரு காலை இழந்துள்ளார்.

    Reply
  • thurai
    thurai

    விசர் சட்டம்பியும், மோட்டுப்பிள்ளைகழும் கதைபோல் ஆகிவிட்டது. பானைக்குள் புகுந்த ஆட்டின் தலையை எடுப்பதற்காக ஆட்டின் தலையையும் வெட்டி, பானையையும் உடைத்துவிட்டார்கள் புலியின் ஆதரவாளர்கள்.

    புலியும் அழிகின்றது, தமிழீழப்போராட்டமும் மறைகின்றது.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அவுஸ்ரேலியாவில் நடந்த தாக்குதலில் ஒரு கார் தாக்கப்பட்டதையே அவுஸ்ரேலியாப் பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். ஆனால் எம்மவர் பல கார்களை அடித்து நொறுக்கி விட்டார்கள் என்று புலியாதரவு இணையத்தளங்களில் படம் காட்டியுள்ளனர். அப்படியாயின் ஏனைய கார்களை இவர்களே உடைத்து விட்டு படம் காட்டியுள்ளனர். தாக்குதல் சம்பவம் பற்றிய வீடியோ இணைப்பிலும் ஒரு காரே தாக்கப்பட்டுள்ளது. இவர்களின் செயல்களால் உலகம் முழுவதும் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாடுகள் தோன்றவே இவர்கள் வழி செய்கின்றார்கள்.

    Reply
  • guna
    guna

    bad tamils tiger partner in the world and tamils allo so .when the tamils stduing the good mooing in the world?

    Reply