இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய் பரவல் – நோயாளர்களில் 25 சத  வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் !

பாடசாலைகள் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளை படாசாலைகளுக்கு  அனுப்பும்போது, டெங்கு நோய் பரவல் தொடர்பில் பெற்றோர்கள் விசேட கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு  தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள்  67 பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் (ஞாயிற்றுக்கிழமை 11ஆம் திகதி வரை) 42,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்  அக்காலப் பகுதியில் 25 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 25 சத  வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் (2022) நாடு  முழுவதும் 76,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், அந்த ஆண்டில் 72 டெங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *