பேராதனை பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த  உணவை உண்ணச்செய்து பகிடிவதை !

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேர், புதிய மாணவர்களைப்  பகிடிவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள்  புதிய மாணவர்களை கடந்த 5ஆம் திகதி விடுதிக்கு அழைத்துச் சென்று  பழுதடைந்த  சோற்றை ஊட்டச் செய்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வகுப்புத்தடை நேற்று முன்தினம் (10) முதல்  அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *