13 வயதுடைய மகள் துஷ்பிரயோகம் – விஷம் அருந்திய பெற்றோர் !

13 வயதுடைய தமது மகள் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து  விஷம் அருந்திய நிலையில் வெலிமடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  சிறுமி வெலிமடை நகரில் மாலை நேரத்தில்  தனியாக காணப்பட்டதால் சந்தேகமடைந்த பொலிஸார் வெலிமடை  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்  மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக  பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்ததனையடுத்து  சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சிறுமியின் 42 வயதுடைய தந்தை மற்றும் 38 வயதுடைய தாயை பொலிஸார் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு வரழைத்துள்ளனர்.

இதன்போதே மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்ததுடன் அவர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரையும் உடனடியாக  மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *