அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு !

இலங்கை அரசால் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படும் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.

இந்த விடயத்தை சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பயனாளிகளின் பட்டியல் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பங்களுக்கான பெயர் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் தற்போதுவரை 5 இலட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகளும், 5 ஆயிரத்து 419 ஆட்சேபனைகளும் கிடைப்பெற்றுள்ளது.

அதேசமயம், விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளை உள்ளடக்கிய இன்னும் வெளியிடப்படாத பயனாளிகளின் இரண்டாவது பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படும்.” என இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *