இலங்கையில் ஒவ்வொரு நாளும் 30 மரணங்கள் – பின்னணி என்ன..?

இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது நாளொன்றுக்கு, 32 முதல் 35 பேர்வரையில், விபத்துகளால் மரணிக்கின்றன நிலையில்

வாகன விபத்துகள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகுதல் உள்ளிட்ட காரணிகளால் குறித்த மரணங்கள் சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது,

மேலும் இது மிகவும் மோசமான நிலைமையாகும் எனவே, இதனைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதே அவசியமாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *