இலங்கை பெண்ணுக்கு குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் குத்தி கொடூர தண்டனை கொடுத்த வீட்டு உரிமையாளர் – சவுதியில் சம்பவம் !

லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற பெண், குடும்ப கஸ்டம் காரணமாகவும், வீடு ஒன்றினை அமைத்துக் கொள்ளும் நோக்குடனும், கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றார்.

இருப்பின் குறித்த பெண்ணுக்கு அந்த நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளர் மூலம் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளாகிய தாய் அது தொடர்பான தகவல்களை தனது கணவனுக்கு தொலைபேசி ஊடாக வழங்கியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி தன்னை கடுமையாக தாக்கி குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி உள்ளதாகவும் தான் பெரும் சிரமப்படுவதாகவும். உடனடியாக இலங்கைக்கு எடுக்குமாறு சிவரஞ்சனி தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்தார்.

கணவன் மற்றும் அவரின் உறவினர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் இச்சம்பவம் தொடர்பாக பல முறை கதைத்தபோதிலும் உபதரகர் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறுகின்றார்..

இருப்பினும் வீரன் சிவரஞ்சனி சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் வந்துள்ளார். பணியகத்தில் இருந்த அதிகாரி சிவரஞ்சனிக்கு உதவி வழங்கியதோடு கழுத்தில் இருந்த குண்டு ஊசி ஒன்றினை அகற்றிய பின்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

14 அன்று இலங்கைக்கு காலை 6 மணிக்கு வந்துள்ளார். கடும் வருத்தத்துடன் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குன்டூசிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. உடம்பில் இருந்து இதுவரை 4 குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் அவரின் கணவர் 15 அன்று புகார் செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *