“இலவச சுகாதாரசேவைகள் குறித்து நம்பிக்கை இழக்ககூடாது.“ – இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்

சமீபத்தைய சுகாதார பிரச்சினைகள் குறித்து மக்கள் அச்சமடையக்கூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தரம் குறைந்த மருந்துகள் தொடர்பிலான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்கள் அவ்வாறான சம்பவங்களினால் அச்சமடையக்கூடாது இலவச சுகாதாரசேவைகள் குறித்து நம்பிக்கை இழக்ககூடாது என இலங்கை மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் சுகாதார துறை சவால்களை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து முழு சுகாதார சேவையையும் மதிப்பிடுவது நியாயமில்லை என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு தரமற்ற மருந்துகளே காரணமா என உரிய விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் தீர்மானங்களிற்கு வரவேண்டும் என வைத்தியர் வின்யா ஆரியரட்ண தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அரசாங்க மருத்துவமனைகளிற்கு கிசிச்சைகளிற்காக தொடர்ந்தும் வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *