சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற யுவதியொருவர் கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்குணரத்தினம் கௌசிகா என்ற 27 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் சடலம் காவல்துறையினரால் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதக குறிப்பிடப்படுகிறது.யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் பட்டமளிப்புக்கு இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவமானது யுவதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வெவ்வேறு பல்கலைகழக மாணவர்கள் இருவர் தமது விடுதிகளில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளார். இதே வேளை பல்கழலகழக மாணவர்களிடையே தற்கொலை எனும் உளநோய் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலை யாழ்ப்பாணத்தில் இன்னமும்அதிகமாக உள்ளதை காண முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள். இதேவேளை, 2023 ஆம் ஆண்டு மே மாதத்ற்குள் 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.