யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் இரண்டு நாட்கள் வரை சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை !

யாழ்.கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இந்நிலையில், எனது மகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததால் ஆட்டோ சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறுமியின் தாயார் பொலிசில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி ஒருவரை வழமையாக ஆட்டோவில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார். இதனைப் பயன்ப டுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.இந் நிலையில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் நான்கு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதே வேளை குறித்த சிறுமி துஸ்பிரயோகத்துக்குள்ளானது சட்டவைத்திய அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் இரண்டு நாட்கள் வரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலைசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *